 |
அதிகாரம்: புலவி Pouting - Pulavi
குறள் இயல்: கற்பியல் The Post marital love - Karpiyal
குறள் பால்: காமத்துப்பால்
|
|
குறள்:1304 |
ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று
குறள் விளக்கம்
ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
(இதுவும் அது.) ஊடியவரை உணராமை - நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று - பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும். ('நீர் பரத்தையரிடத்தில் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற்பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்', என்பதாம்.)
TRANSLITERATION:
Ooti Yavarai Unaraamai Vaatiya
Valli Mudhalarin Thatru
TRANSLATION:
To use no kind conciliating art when lover grieves,
Is cutting out the root of tender winding plant that droops
MEANING IN ENGLISH:
Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root
|
|
|
|
புலவி - MORE KURAL..
|
|
|
|
|
|
|
|
|
|
|