செய்முறை :
நேராக நின்று கொண்டு கால்களை ஒரு மீட்டர் அளவு நன்றாக அகட்டி வைத்து, உள்ளங்கைகள் கீழ்நோக்கக் கைகளைப் பக்க வாட்டில் நேராக வைத்து நின்று மூச்சை இழுக்கவும். பின்னர் இடுப்பை வளைத்து வலது பக்க உள்ளங்கையை இடது காலுக்குப் பக்கத்தில் தரையில் பதிக்கவும். உயர்த்திய இடது கையின் மேல் பார்வையிருக்க மூச்சை வெளியில் விடவும். இதே நிலையிலிருந்து மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இதே போன்று மறுபுறமும் செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை நான்கு முறை செய்யவும்.
நன்மைகள் :
சிறுநீரக கோளாறுகள் குறைகிறது. வாயிற்று பகுதி உறுப்புகள் புத்துணர்வு பெறுகிறது. மூச்சு பிடிப்பு சரியாகிறது.
|